யாழ்.பல்கலைகழக மருத்துவபீடத்தில் 1வது கொரோனா பரிசோதனை..! பரிசோதிக்கப்பட்ட 17 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை..
யாழ்.மருத்துவபீடத்தில் முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் பரிசோதிக்கப்பட்டு ள்ள 17 பேருக்கும் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டள்ளது.
யாழ்.பல்கலைகழக மருத்துவபீடத்தில் இன்று தொடக்கம் கொரோனா வைரஸை சோதனை நடத்தும் பிரிவு ஆரம் பிக்கப்பட்டிருக்கின்றது. இதுவரை காலமும் அனுராதபுரத்திற்கே சென்றுவந்தது.
இந்நிலையில் மானிப்பாய் பகுதியை சேர்ந்த 8 பேர் மற்றும் பூம்பூகார் பகுதியை செர்ந்த 6 பேர் மற்றும் யாழ்.போத னா வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்ட 3 பேர் என மொத்தமாக 17 பேருக்கு
இன்றைய தினம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் 17 பேருக்கும் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.