மக்களுடன் தகாதமுறையில் நடந்துகொண்ட சமுர்த்தி உத்தியோகத்தர் துாக்கி எறியப்பட்டார்..! யாழ்.மாவட்ட செயலர் அதிரடி..

ஆசிரியர் - Editor I
மக்களுடன் தகாதமுறையில் நடந்துகொண்ட சமுர்த்தி உத்தியோகத்தர் துாக்கி எறியப்பட்டார்..! யாழ்.மாவட்ட செயலர் அதிரடி..

பொதுமக்களுடன் தகாத முறையில் நடந்து கொண்ட யாழ்.வடமராட்சி கிழக்கு ஆழியவளை சமுர்த்தி அலுவலர் மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப் பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

இது குறித்து மாவட்ட செயலர் மேலும் கூறுகையில், மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆழியவளை சமூர்த்தி உத்தியோகத்தர் பொதுமக்களுடன் முரன்பாடாக நடந்துகொண்டு மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக தனக்கு 

முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறியுள்ள யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேஸன் குறித்த முறைப்பாட்டை விசாரணை செய்து அறிக்கையிடும்படி மாவட்ட சமூர்த்தி பணிப்பாளரை கோரியுள்ளதாகவும், குறித்த சமுர்த்தி உத்தியோத்தரை 

மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு தற்காலிக இடமாற்றம் செய்யும்படியும் உத்தரவிட்டிருப்பதாக கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு