யாழ்.போதனா வைத்தியசாலையில் 10 பேர் அனுமதி..! நிலவரம் என்ன? பணிப்பாளர் விளக்கம்..
யாழ்.போனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று சந்தேகத்தின் பெயரில் இன்று காலை தகவலின் படி 10 பேர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின்றார்.
மேலும் இதுவரை யாழ்.மாவட்டத்தில் 1 கொரோனா நோயாளியே இனங்காணப்பட்டுள்ளார். மேலும் 39 பேர் இதுவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
என பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.