ஊரடங்குவேளையில் அடிதடி..! தந்தையும் மகனும் வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
ஊரடங்குவேளையில் அடிதடி..! தந்தையும் மகனும் வைத்தியசாலையில் அனுமதி..

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் யாழ்.கொடிகாமம் பகுதியில் இரு வீட்டாருக்கிடை யில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக முடிந்த நிலையில் தந்தையும், மகனும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

இச்சம்பவம் கொடிகாமம் சந்தை வீதியில் நேற் றுமுன்திம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள் ளது. செ.லோகேஸ்வரன் (வயது-45) மகன் லோகேஸ்வரன் மதுசன் (வயது-20) ஆகியோரே இவ்வாறு காயமடைந்தனர். அந்த தகராறில் இரு பெண்களும் 

அடிகாயங்களுக்கு உள்ளாகியுள்ள னர் என்று தெரிவிக்கப்படுகிறது. வாய்ச் சண்டை கைகலப்பாக மாறி குழுத் தகரா றாக மாறியது என்று தெரிவிக்கப்படுகிறது. வீடு புகுந்தே தாக்குதல் நடத்தப்பட்டது என்று பொலி ஸார் தெரிவித்தனர். 

சம்பவம் பொலிஸாருக்கு அறி விக்கப்பட்டதை தொடர்ந்து காயமடைந்த இருவரையும் பொலிஸார் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்த்தனர்.மேலதிக விசாரணைகளையும் கொடி காமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு