யாழ்.மாவட்டத்தில் சிக்கியிருக்கும் 300 பேர்..! மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு சிக்கல் இல்லையாயின் வெளியேற்ற நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் சிக்கியிருக்கும் 300 பேர்..! மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு சிக்கல் இல்லையாயின் வெளியேற்ற நடவடிக்கை..

யாழ்.மாவட்டத்திற்கு வேலைக்காக வந்திருந்த நிலையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமையால் வீடு திரும்ப முடியாதுள்ளோர். தமது சொந்த மாவட்டங்களுக்கு திரும்புவதற்கு ஒழுங்கமைப்பு செய்யப்பட்டிருப்பதாக மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் வேலைக்காக வந்திருந்த நிலையில் சுமார் 300 பேர் சிக்கிருக்கின்றனர். இவர்களை எதிர்வரும் 6ம் திகதி மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தியதன் பின்னர் பிரச்சினை இல்லாதவர்கள் 

தங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பபடுவார்கள். எங்களாலும் மாவட்டச் செயலரினாலும் விடுத்த கோரிக்கை படைத்தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் எதிர்வரும் 7 ஆம் திகதியளவில் தத்தமது மாவட்டங்களுக்கு திரும்ப வாய்ப்புள்ளது என வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு