யாழ்.நாவாந்துறை, ஐந்துசந்தி பகுதிகளில் இன்றும் தேடுதல்..! கொரோனாவால் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் வந்தது எப்படி? புதிய தகவலும் வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவாந்துறை, ஐந்துசந்தி பகுதிகளில் இன்றும் தேடுதல்..! கொரோனாவால் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் வந்தது எப்படி? புதிய தகவலும் வெளியானது..

கொரோனா வைரஸ் நேற்று முன்தினம் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் உயிரிழந்த நபர் யாழ்ப்பா ணத்திற்கு பேருந்தில் வந்து, திரும்பவும் பேருந்தில் சென்றுள்ளார். மேலும் அவர் யாழ்ப்பாணத்தில் சில வர்த்தக நிலையங்களுக்கும் சென்று வந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

இந்நிலையில் சுகாதார பரிசோதகர்கள் ஊடாக நாவாந்துனை, ஐந்துசந்தி பகுதிகளில் தொடர்ச்சியாக தேடுதல் நடவ டிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றது. நேற்றய தினம் மேற்படி நாவாந்துறை, ஐந்துசந்தி பகுதிகளில் 14 வரை யான குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், 

இன்றும் தொடர் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு