சுவிஸ் மதபோதகரின் யாழ்.வருகையால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 346 பேருக்கு அடுத்துவரும் சில நாட்களில் விடுதலை..! சிக்கல் இல்லை என்றால் மட்டும்..

ஆசிரியர் - Editor I
சுவிஸ் மதபோதகரின் யாழ்.வருகையால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 346 பேருக்கு அடுத்துவரும் சில நாட்களில் விடுதலை..! சிக்கல் இல்லை என்றால் மட்டும்..

சுவிஸ் மதபோதகருடன் நெருங்கி பழகியமை மற்றும் ஆராதனையில் கலந்து கொண்டமை போன்றவற்றுக்காக வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் 346 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படா தவிடத்து ஏப்ரல் 6ம் திகதி தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். 

மேற்கண்டவாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். உலகை உலுக்கி வருகின்ற கொரோனோ தொற்று இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கமைய யாழ்மாவட்டத்திலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகல் பலரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். 

இதற்கமைய யாழ்.அரியாலையில் இடம்பெற்ற சிவஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் உட்பட யாழ் மாவட்டத்தில் 319 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.அதே போன்று கிளிநொச்சி மன்னார் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள 346 பேருக்கும் இதுவரை கொரோனோ தொற்று இணங்காணப்படவில்லை. ஆனாலும் தனிமைப்படுத்தும் காலம் முடிவடையும் வரை அவர்கள் தனிமைப்படுத்தப்படடிருப்பார்கள். ஆகவே அந்தக் காலத்திற்குள்ள அவர்களுக்கு தொற்று ஏதும் காணப்படாதவிடத்து 

எதிர்வரும் 6 ஆம் திகதி அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு