யாழ்.நாவாந்துறை, ஐந்துசந்தி பகுதிகளில் 14 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்..! 130 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவாந்துறை, ஐந்துசந்தி பகுதிகளில் 14 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்..! 130 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை ஆரம்பம்..

யாழ்ப்பாணம்- நாவாந்துறை மற்றும் ஐந்துசந்தி பகுதிகளில் சுமார் 14 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 130 பேர் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். 

நீர்கொழும்பை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா தொற்றினால் நேற்று மாலை மரணமடைந்த நிலையில் அவர் கடந்த 7ம் திகதி தொடக்கம் 9ம் திகதிவரை யாழ்.மாவட்டத்தில் தங்கியிருந்துள்ளார். 

இதனடிப்படையில் அவர் தங்கியிருந்த இடம், சந்தித்த நபர்கள் போன்ற தகவல்கள் பூரணமாக சேகரிக்கப்பட்டு தேடுதல் மூலம் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையிலேயே 

14 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், மற்றயவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றது. இதன்படி 130 பேர் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு