யாழ்.நாவாந்துறை, ஐந்துசந்தி பகுதிகளில் 10ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்..! பொலிஸார், இராணுவம் கண்காணிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவாந்துறை, ஐந்துசந்தி பகுதிகளில் 10ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்..! பொலிஸார், இராணுவம் கண்காணிப்பு..

கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்றய தினம் உயிரிழந்த நபர் யாழ்ப்பாணத்தில் பழகிய நபர்கள், இடங்கள் அடையளப்படுத்தப்படும் நிலையில், சற்று முன்னர் 10ற்கு மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

யாழ்.நாவாந்துறை- ஹாதி அபூபக்கர் வீதியில் உள்ள 3 குடும்பங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதேபோல் அதனை சூழவுள்ள பகுதியில் 7ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். 

நீர்கொழும்பில் வாழும் ஒருவர் கொரோனா தொற்றக்குள்ளான நிலையில் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் புலனாய்வு பிரிவினர் 120 பேருடைய தகவல்களை ஆரம்பகட்டமாக சேகரித்திருந்த நிலையில் தற்போது 10ற்கு மேற்பட்ட குடும்பங்கள் 

அப்பகுதி கிராமசேவகர் மற்றும் பொலிஸாரின் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு