யாழ்.நாவாந்துறை, ஐந்துசந்தி பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கை..! பாரியளவில் பலர் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவாந்துறை, ஐந்துசந்தி பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கை..! பாரியளவில் பலர் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்..

கொரோனா தொற்றினால் நேற்று மாலை உயிரிழந்த நபர் கடந்த 7ம் திகதி தொடக்கம் 9ம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த நிலையில், அவர் சந்தித்த, பழகிய நபர்கள் மற்றும் செ ன்றுவந்த இடங்களை தேடி சுகாதார பிரிவில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். 

யாழ்.நகரை அண்டியிருக்கும் ஐந்துசந்தி பகுதி மற்றும் நாவாந்துறை பகுதிகளில் இன்று காலை தொடக்கம் புனலாய்வு பிரிவினர் நடாத்திய அதிரடி நடவடிக்கையின் ஊடாக 120 பேர் அடையா ளப்படுத்தப்பட்டிருந்தனர். அதனடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டவர்களை கண்டுபிடித்து

தனிமைப்படுத்தும் நடவடிக்கையிலேயே சுகாதார பிரிவினர் களமிறங்கியிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு