SuperTopAds

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல். சந்தேகநபர் கைது

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல். சந்தேகநபர் கைது

கிளிநொச்சில் சுயேட்சைக் குழுவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு செய்தி கேரிக்க சென்ற சுயாதினச் செய்தியாளர் மீது தாக்குதல் மேற்கொண்டு அவதூறாக பேசி வெளியேற்றிய சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேக நபரைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.


கிளிநொச்சில் நடைபெவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் போட்டயிடுகின்ற கட்சிகளினதும் சுயேட்சைக்குழுவினதும்  தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.


இதில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் கிளிநொச்சி பொதுச்சந்தை வளாகத்திலும்  சமத்துவம் சமுகநீதிக்கான மக்கள் அமைப்பான சுயேட்சைக்குழுவின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் கிளிநொச்சி மத்திய கல்லுரி மைதானத்திலும் நேற்று  (07-02-2018)இரவு 5 மணிக்கு நடைபெற்றுள்ளது.


இதன்போது சுயேட்சைக்குழுவின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திற்கு செய்தி கேரிக்க சென்ற ஊடகவியலாளர் ஒருவர் மீது குழுவின் ஆதரவாளரான வி. சந்திரதாஸ் என்பவர் பிரச்சாரக் கூட்டத்திற்கு செய்தி கேரிக்க சென்ற சுயாதினச் செய்தியாளர் மீது தாக்குதல் மேற்கொண்டு அவதூறாக பேசி வெளியேற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


இவ்வாறு பாதிக்கப்பட்ட  ஊடகவியலாளர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை  முறைப்பாடு செய்துள்ளதையடுத்து இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் கிளிநொச்சி பொலிஸார் குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.