யாழ்.மாவட்டத்தில் இருநாள் ஆராதனை நடாத்திய மதபோதகர் உள்ளிட்ட 6 பேர் தேவாலயத்திற்குள் முடக்கப்பட்டனர்..! உண்மையை மறைத்ததாக குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் இருநாள் ஆராதனை நடாத்திய மதபோதகர் உள்ளிட்ட 6 பேர் தேவாலயத்திற்குள் முடக்கப்பட்டனர்..! உண்மையை மறைத்ததாக குற்றச்சாட்டு..

யாழ்.மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டமை மற்றும் இந்தியாவில் இருந்து வந்த மதபோதகருடன் இணைந்து ஆராதனை நடாத்தியமை போன்றவற்றினால் கொரோனா சந்தேகத்தில் மத போதகர் மற்றும் அவருடன் நெருங்கி பழகிய 6 பேர் தேவாலயம் ஒன்றுக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் ஹற்றன் தறவளை என்ற பகுதியில் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, தமிழகம் திருநெல்வேலியிலிருந்து கடந்த 11ஆம் திகதி பாலசேகர் எனும் மதபோதகர் இலங்கை வந்துள்ளார். அதன் பின்னர் தரவளை தேவாலயத்திலுள்ள மதபோதகர் 

அவரை ஹற்றனுக்கு அழைத்துவந்துள்ளார். 12, 13, 14, 15 ஆம் திகதிகளில் தரவளையில் ஆராதனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒருநாள் கூட்டத்தில் சுமார் 60 பேர் வரை கலந்துகொண்டுள்ளனர். அதன்பின்னர், திருநெல்வேலி போதகரும், இவரும் யாழ்ப்பாணத்துக்குச் சென்று 

அங்கு 16, 17ஆம் திகதிகளில் ஆராதனைக் கூட்டங்களை நடத்தியுள்ளனர். கொழும்பு வந்து திருநெல்வேலி போதகரை அனுப்பிவிட்டு தரவளைப் பகுதி போதகர், தேவாலயத்துக்கு வந்துள்ளார். அதன்பின்னரும் ஆராதனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தொடர்பாக 

தகவல்கள் வழங்குமாறு கோரப்பட்டிருந்த போதிலும் அந்த நடைமுறையை குறித்த போதகர் பின்பற்றவில்லை. தன்னை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே நேற்று முதல் அவரும் அவருடன் தொடர்பைப் பேணிய 8 பேரும் தேவாலயத்திலேயே 

தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆராதனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு