மீனவர்களுக்கு மீன்பிடிக்க வழங்கிய அனுமதியை பயன்படுத்தி கஞ்சா கடத்திய கழுசறை கைது..! யாழ்.வடமராட்சி கிழக்கில் சம்பவம்..
கொரோனா அச்சத்தில் யாழ்.மாவட்டம் முடங்கியிருக்கும் நிலையில், மீன்பிடிப்பதற்காக அரசா ங்கம் வழங்கிய அனுமதியை பயன்படுத்தி கஞ்சா கடத்திய கடத்தல்காரன் கைது செய்யப்பட்டிருக்கின்றான்.
இன்று காலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவரையும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருவதாக பளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.