ஜனாதிபதியின் உத்தரவு..! யாழ்.சிறைச்சாலையிலிருந்து 110 பேர் பிணையில் வெளியேறினர்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதியின் உத்தரவு..! யாழ்.சிறைச்சாலையிலிருந்து 110 பேர் பிணையில் வெளியேறினர்..

யாழ்.மத்திய சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 110 கைதிகள் பிணையில் விடுவிக்க ப்பட்டிருக்கின்றனர். கொரோனா அச்சம் காரணமாக சிறைச்சாலைகளில் உள்ள நெருக்கடியை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கடந்த சில தினங்களில் மட்டும் 110 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறு குற்றங்கள் புரிந்த நீதிமன்றங்களால் பிணை வழங்கப்பட்டு பூர்த்தி செய்ய முடியாது 

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் என 110 பேர் இதுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறே யாழ்ப்பாணம் சிறைச்சாலை இருந்து விடுதலை செய்யப்பட்ட 110 கைதிகளும் தனி நபர் பிணையில்(சுய) செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது தங்களுக்குத் தாங்களே பிணையில் கையப்பமிட்டு நீதிபதிகளின் அறிவுறுத்தலின் படி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார் விடுதலை செய்யப்பட்ட அனைவரும் அவர்களின் வழக்குத் தவணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள மேலும் பல கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு