யாழ்.மாவட்ட மக்களே அவதானம்..! ஊரடங்கு சட்டத்தை இறுக்கமாக அமுல்படுத்த இராணுவ அதிரடிப்படை களமிறக்கப்பட்டுள்ளது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்களே அவதானம்..! ஊரடங்கு சட்டத்தை இறுக்கமாக அமுல்படுத்த இராணுவ அதிரடிப்படை களமிறக்கப்பட்டுள்ளது..

யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டத்தை இறுக்கமாக கடைப்பிடிப்பதற்காக இராணுவ கொமாண் டோ படைப்பிரிவினர் பல அணிகளாக ரோந்து நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். 

இன்று காலை யாழ்.நகரில் குறித்த கொமாண்டோ படைப்பிரிவினர் ரோந்து நடவடிக்கையில் ஈ டுபட்டிருந்தமையினை அவதானிக்க கூடியதாகவிருந்தது. 

ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ளபோதும் கட்டுப்பாடுகளை மீறி மக்கள் வீதிகளில் நடமா டியதுடன், அநாவசியமாக பலர் வீதிகளில் அலைந்த நிலையில் பொலிஸாரால் 

தனித்து கட்டுப்படுத்த முடியாத நிலையில் இராணுவ விசேட படைப்பிரிவு களமிறக்கப்பட்டிருக் கின்றது. எனவே பொதுமக்கள் அவதானமாக நடந்து கொள்ளுவது சிறந்தது. 

பொலிஸாரைபோல் அல்லாமல் முதலில் தண்டணை பின்பே விசாரணை. எனவே அவதானமாக நடந்து கொள்வது மிகவும் சிறப்பானதாக அமையும். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு