வறிய மக்களுக்கு உணவு கொண்டு சென்ற பிரதேசசபை உறுப்பினர் உள்ளிட்ட 4 பேர் கைது..! விதண்டாவாதம் பேசிய யாழ்.கொடிகாமம் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
வறிய மக்களுக்கு உணவு கொண்டு சென்ற பிரதேசசபை உறுப்பினர் உள்ளிட்ட 4 பேர் கைது..! விதண்டாவாதம் பேசிய யாழ்.கொடிகாமம் பொலிஸார்..

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தவேளையில் நடமாடிய குற்றச்சாட்டில் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் மற்றும் 4 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பயணித்த வாகனமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. 

இந்த சம்பவம் யாழ்.கொடிகாமம் வறணி பகுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற் றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வசதி குறைந்த குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்க முற்பட்ட சமயமே 

இவர்கள் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஒருவரும், அவர் சார்ந்த கட்சியின் ஆதரவாளர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.கைது செய்யப்பட்ட வேளையில், 

சாவகச்சேரிப் பகுதியில் உணவுப் பொருள்களை விநியோகிப்பதற்காக சாவகச்சேரி பொலிஸாரினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் அவர்களிடம் இருந்த போதிலும், கொடிகாமம் பொலிஸ் பிரிவினுள் ஊரடங்கு வேளையில் நடமாடுவதற்கான அனுமதிப்பத்திரம் எதனையும் அவர்கள் வைத்திருக்கவில்லை 

என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட நால்வரும், அவர்கள் பயணம் செய்த வாகனமும் இந்தச் செய்தி எழுதப்படும் வரை கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.மேலும், ஊரடங்கு வேளையில் நடமாடுவோருக்குப் பொலிஸ் பிணை மறுக்கப்பட்ட நிலையில், 

நாளை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவார்கள் என அறியவருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு