சாவகச்சேரியில் 20 பேர் கைது..! திருமண அழைப்பிதழ் காட்டியதால் மணமகனுக்கு பொலிஸ் பிணை, ஊரடங்கை வேடிக்கை பார்க்க அலைந்ததால் வினை..

ஆசிரியர் - Editor I
சாவகச்சேரியில் 20 பேர் கைது..! திருமண அழைப்பிதழ் காட்டியதால் மணமகனுக்கு பொலிஸ் பிணை, ஊரடங்கை வேடிக்கை பார்க்க அலைந்ததால் வினை..

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது காரணமில்லாமல் வீதிகளில் நடமாடிய 20 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், நாளை திருமணம் செய்து கொள்ளவிருந்த மணமகன் திருமண அழைப்பிதழ் காட்டியதால் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

இந்த சம்பவம் இன்று மாலை சாவகச்சேரியில் இடம்பெற்றிருக்கின்றது, ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது திருமண வீட்டுக்கு வாகனத்தில் சென்றவர்கள் மற்றும் காரணமில்லாமல் வீதிகளில் அலைந்து திரிந்த 20 பேரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். 

அவர்களில் ஒருவர் நாளை திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளவுள்ளார். அவர் தனது திருமண அழைப்பிதழை காட்டிய நிலையில் அவர் பொலிஸ் பிணையில் செல்ல அனமதிக்கப்பட்டிருக்கின்றார். மிகுதி 19 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு