கொரோனா தொற்கை கண்டறியும் சோதனை யாழ்.மாவட்டத்திலேயே செய்ய நடவடிக்கை..! புதன் கிழமை முதல் ஆரம்பமாகலாம்..
யாழ்.மாவட்டத்திலேயே கொரோனா பரிசோதனைகளை செய்வதற்காக யாழ்.பல்கலைகழக மருத்துவப பீடத்தில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் நிலையில் எதிர்வரும் புதன் கிழமை பணிகள் ஆரம்பமாகவுள்ளது.
இதனை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின்றார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,
யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் உள்ள பிசிஆர் இயந்திரத்தை இயக்கும் பணிகள் நடந்து வருகிறது. புதன் கிழமையில் இருந்து யாழில் பரிசோதனைகள் ஆரம்பிக்கலாமென நம்புகிறோம்.
கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பிசிஆர் பரிசோதனை இயந்திரங்கள் இரண்டு யாழ்ப்பாணத்தில் இருக்கும் நிலையில், அவற்றை இயக்கும் ஆளணி
மற்றும் தொடர்புடைய பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யுமாறு கடந்த அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.