யாழ்.நகரில் 25 பேர், மானிப்பாயில் 10 பேர் கைது..! ஊரடங்கு சட்டத்தை மீறி காரமில்லாமல் அலைந்து திரிந்ததால் வந்த வினை..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் 25 பேர், மானிப்பாயில் 10 பேர் கைது..! ஊரடங்கு சட்டத்தை மீறி காரமில்லாமல் அலைந்து திரிந்ததால் வந்த வினை..

ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகள், பொது இடங்களில் அலைந்து திரிந்த குற்றச்சாட்டில் யாழ்.நகரில் 25 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

இன்றைய தினம் யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படாத நிலையில், அரசாங்கம் பொதுமக்களின் நன்மைகருதி மருந்தகங்கள், அத்தியாவசிய உணவு விற்பனை நிலையங்களை திறந்திருந்ததை

காரணம்காட்டி யாழ்.நகரில் மக்கள் பொறுப்பற்றவிதமாக நடந்து கொண்டனர். இந்நிலையில் நண்பகலின் பின்னர் நிலமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக

பொலிஸார் சட்டத்தை இறுக்கமாக கடைப்பிடித்தனர். இதனால் நண்பகலின் பின்னர் 25 பேர் காரணமில்லாமல் வீதிகள், பொது இடங்களில் அலைந்து திரிந்த நிலையில் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதுடன், இவர்களுக்கு பொலிஸ் பிணையும் வழங்கப்படமாட்டாது. மேலும் மானிப்பாய் பொலிஸ் பிரிவில் 

இன்று மாலை 10 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸாரால் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு