யாழ்.கைதடி இலங்கை வங்கி கிளை 14 நாட்களுக்கு இழுத்து பூட்டப்பட்டது..! இராணுவ பாதுகாப்பு, கிருமி நீக்கல் நடவடிக்கை ஆரம்பம்..
யாழ்.கைதடி சந்தியில் உள்ள இலங்கை வங்கியில் பணியாற்றும் பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் வீட்டுக்கு அருகில் இருப்பதுடன், உறவினர் என அடையாளம் காணப் பட்டிருக்கும் நிலையில் இலங்கை வங்கி கிளை 14 நாட்கள் பூட்டப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பணியாளர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், குறித்த வங்கி கிளை அலுவலகத்தில் கிருமி நீக்கிகள் இன்று விசிறப்பட்டிருக்கின்றது.