யாழ்.அரியாலைக்கு வந்த சுவிஸ் நாட்டு மதபோதகருடன் நேரடி தொடர்பு 18 பேர் வீடுகளில் இருந்து அகற்றப்பட்டனர்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.அரியாலைக்கு வந்த சுவிஸ் நாட்டு மதபோதகருடன் நேரடி தொடர்பு 18 பேர் வீடுகளில் இருந்து அகற்றப்பட்டனர்..!

சுவிஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த மதபோதகருடன் நேரடியாக தொடர்புகளை பேணிய 18 பேர் காங்கேசன்துறை தல் செவனவில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்த ப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

இதனை வடமாகாண சுகாதார திணைக்கள தகவல்கள் சில    உறுதிப்படுத்தியிருக்கின்றன. அரியாலையில் ஆராதனைக் கூட்டம் நடத்துவதற்கு சுவிஸிலிருந்து வந்த மதபோதகருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

அவருடன் ஓர் அறையில் தனித்துச் சந்தித்த தாவடி வாசிக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து மதபோதகருடன் நெருங்கிப் பழகிய 18பேர் அடையாளப்படுத்தப்பட்டனர். 

இவர்களில் 12பேர் நேற்றுக் காலையும் எஞ்சிய 6 பேர் நேற்று மாலையும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு