கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுவீா்கள்..! ஆளுநா் கடும் எச்சாிக்கை..
யாழ்.செம்மணி தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டவா்கள், சுவி ஸ் நாட்டிலிருந்து வந்த பாதிாியாருடன் பழகியவா்கள் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்ப டுத்தவேண்டும். மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்டவாறு வடமாகாண ஆளுநா் எச்சாிக்கை விடுத்துள்ளாா், சுவிட்சர்லாந்து நாட்டு போதகருக்கும் அவரைச் சந்தித்தவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்த அவசர கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
அத்துடன் அப்போதகரின் தலைமையில் நடைபெற்ற ஆராதனை நிகழ்வில் பங்கெடுத்தவர்கள் தங்களது விபரங்களை அருகில் உள்ள பொதுச் சுகாதார உத்தியோகத்தருக்குத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தங்களுடையதும் தங்களைச் சார்ந்தவர்களதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது மிக அவசியமானது. தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் சார்ள்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.