இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவா் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..! கொரோனா தொற்றிருக்கலாம் என சந்தேகம்..

ஆசிரியர் - Editor I
இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவா் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..! கொரோனா தொற்றிருக்கலாம் என சந்தேகம்..

வெளிநாட்டிலிருந்து வந்த நிலையில் கனகராயன்குளம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிப்புக்காக வை க்கப்பட்டிருந்த ஒருவா் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா். 

மாத்தறை பகுதியினைச் சேர்ந்த குறித்த நபர் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியிருந்த நிலையில், கட்டநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானப்படையின் பாதுகாப்பில் கனகராயன்குளப் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.

அங்கு கண்காணிப்பில் இருந்த அவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக கொரோனா மருத்துவ பரிசோதனைகளை செய்வதற்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். யாழ்.போதனா வைத்திய சாலையில் கொரோனா தடுப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 

அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு