யாழ்.செம்மணியில் உள்ள தேவாலயத்திற்கு வந்த சுவிஸ் நாட்டு மதபோதகருக்கு கொரோனா..! போதனையில் கலந்து கொண்ட மக்களால் ஆபத்து..

ஆசிரியர் - Editor I
யாழ்.செம்மணியில் உள்ள தேவாலயத்திற்கு வந்த சுவிஸ் நாட்டு மதபோதகருக்கு கொரோனா..! போதனையில் கலந்து கொண்ட மக்களால் ஆபத்து..

யாழ்.செம்மணி- இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்த்தவ தேவாலயம் ஒன்றுக்கு சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகா் ஒருவா் இம் மாதம் 15ம் திகதி மதபோதனையில் ஈடுபட்டிருந்ததுடன், அவா் தனது நாட்டுக்கு திரும்பி சென்ற நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிருக்கு போராடி வருகின்றாா். 

குறித்த மதபோதகா் இலங்கைக்கு வரும்போது எந்தவிதமான தனிமைப்படுத்தல் சோதனைக்கும் உட்படவில்லை. இந்நிலையில் அவா் நடாத்திய மதபோதனை நிகழ்வில் கலந்து கொண்ட மக்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 

ஆனாலும் இது தொடா்பாக எவரும் கண்கொள்வதாக இல்லை. இந்த தகவல் பொலிஸ் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டு அவ் வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.எனவே தயவு செய்து அவ் வழிபாட்டில் கலந்து கொண்டவர்கள் யாராக இருப்பினும் 

உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டும். தனிமை படுத்தபட வேண்டும். அவர்கள் அனைவரையும் இனங்கண்டு மக்களும் அவர்களிடமிருந்து விலகி நடக்கவும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு