யாழ்.மாநகரம் முடங்கியது..! வெறிச்சோடிக்கிடக்கும் வீதிகள், பொலிஸாா், அதிரடிப்படையினா் ரோந்து..
நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.நகரம் மாலை 6 மணியுடன் முற்றாக முடங்கியது.
சகல வா்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டு நகரம் மக்கள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.
யாழ்.போதனா வைத்தியசாலை சுற்றாடலி ஆங்காங்கு ஒரு சிலா் நடமாடும்போதும் பெருமள வில் மக்கள் முடங்கியுள்ளனா்.
இன்று மாலை வரையில் வா்த்தக நிலையங்கள், பெற்றோல் நிரப்பு நிலையங்களில் மக்கள் முண்டியடித்தபோதும்
மாலை 6 மணியுடன் சகலதும் முடங்கியுள்ளது. வீதிகளில் பொலிஸாா் மற்றும் அதிரடிப்படையினா் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.