யாழ்.கொடிகாமம் 522 இராணுவ தலமையகத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம்..! யாழ்.மாவட்டத்தில் பதற்றம் அதிகாிப்பு..
யாழ்.கொடிகாமம் பகுதியில் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவிருக்கும் நிலையில் குறித்த அறிவித்தலை யாழ்.மாவட்ட செயலா் க.மகேசன் பாதுகாப்பு அமைச்சு அறியப் படுத்தியிருக்கின்றாா்.
கொடிகாமம் 522ஆவது படை முகாமில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கோரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க
பாதுகாப்பு அமைச்சு – இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்திருந்தது.இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான கோரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமம் இராணுவ முகாமில் அமைப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து வந்து தங்கியிருப்போர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையோர் இந்த நிலையத்தில் தங்க வைக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்காக 5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடும் கோரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.