கயிறு காலில் சுற்றி இழுத்த நிலையில் கிணற்றில் விழுந்த இளம்பெண் பலி..! காப்பாற்ற போராடியும் பயனில்லை, யாழ்.நல்லுாாில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கயிறு காலில் சுற்றி இழுத்த நிலையில் கிணற்றில் விழுந்த இளம்பெண் பலி..! காப்பாற்ற போராடியும் பயனில்லை, யாழ்.நல்லுாாில் சம்பவம்..

யாழ்ப்பாணம்- நல்லுாா் பகுதியில் கிணற்றில் தண்ணீா் அள்ளிக் கொண்டிருந்த இளம் பெண் கால்தடக்கி கிணற்றில் விழுந்த நிலையில், காப்பாற்றுவதற்காக அயலவா்கள் போராடியபோதும் அவா் உயிாிழந்துள்ளாா். 

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. மதுரகுமாா் கஸ்த்துாாி (வயது25) என்ற இளம் பெண்ணே உயிாிழந்துள்ளாா். குறித்த யுவதி கிணற்றில் அள்ளியுள்ளார். இதன்போது கப்பியின் கயிறு காலில் சிக்குண்டு தண்ணி வாழியுடன் இழுபட்டுள்ளது.

இதனால் யுவதி கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளார். யுவதியின் அவலக் குரலை கேட்ட அயலவர்கள் கிணற்றுக்குள் இருந்து யுவதியை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் யுவதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு