தொடா்ந்து வாந்தி எடுத்துக் கொண்டிருந்த சிசு..! திடீரென உயிாிழந்த பாிதாபம், யாழ்.துன்னாலையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
தொடா்ந்து வாந்தி எடுத்துக் கொண்டிருந்த சிசு..! திடீரென உயிாிழந்த பாிதாபம், யாழ்.துன்னாலையில் சம்பவம்..

யாழ்.துன்னாலையில் பிறந்து 4 நாட்களேயான சிசு ஒன்று தொடா்ச்சியாக வாந்தி எடுத்துக் கொ ண்டிருந்த நிலையில் திடீரென உயிாிழந்துள்ளது. 

துன்னாலை மேற்கு கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த சிவநேசன் புவனேஸ்வரி என்பவர்களுக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. 

குழந்தை வீட்டில்இருந்தபோது நேற்று வாந்தியெடுத்துள்ளது. இதனை அவதானித்த பெற்றோர் உடனடியாக மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். 

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அன்றைய தினம் இரவு யாழ்ப்பாணம் பேதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

 எனினும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிலமணி நேரங்களில் குறித்த ஆண்குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. இந்த இறப்புத் தொடர்பான விசாரணைகளை 

யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறோம்குமார் மேற்கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு