இறுதி செய்யப்பட்டது பட்டியல்..! 4 பேர் கையோப்பமிட்டனர், இறுதி நேத்தில் அம்பிகா வெளியே ஆனோல்ட் உள்ளே..

ஆசிரியர் - Editor I
இறுதி செய்யப்பட்டது பட்டியல்..! 4 பேர் கையோப்பமிட்டனர், இறுதி நேத்தில் அம்பிகா வெளியே ஆனோல்ட் உள்ளே..

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டிருப்பதுடன் இன்று காலை 4 பேர் வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளனர்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பணிமனையில் இன்று நண்பகல் 12 மணிக்கு வேட்புமனுவில் 4 வேட்பாளர்கள் கையொப்பமிட்டனர்.

தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன், கஜதீபன், கு.சுரேன், திருமதி சசிகலா ரவிராஜ், இம்மானுவேல் ஆனல்ட் மற்றும் தபேந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ சேனாதிராசா, ஈ.சரவணபவன், பா.கஜதீபன், தபேந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டனர். ஏனைய ஆறு பேரும் நாளை கையொப்பமிடுகின்றனர்.

இதேவேளை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பு மனு நாளை முற்பகல் 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் பணிமனையில் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை வேட்பாளர் பட்டியலில் இருந்து அம்பிகா சற்குருநாதன் விலக்கப்பட்டு யாழ்.மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் வேட்பாளராக இணைக்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு