ஓரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகள்..! தாயும் சேய்களும் நலம், யாழ்.போதனா வைத்தியசாலையில் அடுத்தடுத்து அற்புதம்..

ஆசிரியர் - Editor I
ஓரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகள்..! தாயும் சேய்களும் நலம், யாழ்.போதனா வைத்தியசாலையில் அடுத்தடுத்து அற்புதம்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரு பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த 2வது சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.

யாழ்.உடுவில் பகுதியை சேர்ந்த 30 வயதான ஆசிரியை ஒருவரே ஒரு பிரசவத்தில் 4 பெண் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

சத்திர சிகிச்சை மூலம் மகப்பேற்று நிபுணர் வைத்திய கலாநிதி சுரேஸ்குமார் குழந்தைகளையும், தாயையும் நலமாக மீட்டார்.

இதேபோல் இம்மாதம் 2ம் திகதியும் யாழ்.கட்டுவன் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில்

4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு