கொரோனா பீதிக்கு நடுவில் தேர்தல் விதிகளை மீறி சீ.வி.விக்னேஷ்வரனின் சுவரொட்டிகளை ஒட்டிய 3 பேர் கைது..! யாழ்.கொக்குவில் பகுதில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கொரோனா பீதிக்கு நடுவில் தேர்தல் விதிகளை மீறி சீ.வி.விக்னேஷ்வரனின் சுவரொட்டிகளை ஒட்டிய 3 பேர் கைது..! யாழ்.கொக்குவில் பகுதில் சம்பவம்..

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் வேட்பாளர் சீ.வி.விக்னேஷ்வரனின் புகைப்படங்களுடன் கூடிய சுவரொட்டிகளுடன் 3 பேரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த தேர்தல் சுவரொட்டிகளை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு காங்கேசன்துறை வீதி உப்புமடத்தடியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று என்றும் பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

இன்று மாலை முச்சக்கர வண்டி ஒன்றில் வந்தவர்கள் கொக்குவில் பகுதியில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

இதன் போது அப்பகுதியில் ரோந்து சென்ற பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.

இதன்போது தேர்தல் சுவரொட்டிகளையும், முச்சக்கர வண்டியையும் பறிமுதல் செய்து பொலிஸ் நிலையத்திற்க்கு எடுத்து சென்றுள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படும் அவர்கள் விசாரணையின் பின் சான்றுப் பொருட்களுடன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு