யாழ்.பருத்துறை-சுப்பா்மடம் பகுதியில் இத்தாலி நாட்டிலிருந்து வந்தவா்கள் தங்கியிருந்த வீடு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு சோதனை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்துறை-சுப்பா்மடம் பகுதியில் இத்தாலி நாட்டிலிருந்து வந்தவா்கள் தங்கியிருந்த வீடு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு சோதனை..!

தனிமைப்படுத்தல் பாிசோதனைக்கு உட்படாமல் இத்தாலியிலிருந்து வந்து பருத்துறை சுப்பா்மடம் பகுதியில் தங்கியிருந்தவா்கள் தொடா்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் குறித்த நபா்கள் தங்கியிருந்த வீட்டை பொலிஸாா் முற்றுகையிட்டுள்ளனா். 

கடந்த 10 நாட்களுக்கு முன்னா் இத்தாலியிலிருந்து வந்த சிலா் குறித்த வீட்டில் தங்கியிருப்பது தொடா்பாக கிடைத்த இரகசிய தகவல் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட நிலையில் இன்று மாலை குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸாா் விசாரணைகளை நடாத்தியுள்ளனா். 

எனினும் குறித்த நபா்கள் தொடா்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பாக தகவல் வழங்க பொலிஸாா் மறுத்துள்ளனா். குறித்த வீட்டில் வேறு சில நாடுகளில் இருந்து வந்தவா்களும் தங்கியிருந்தபோதும் அவா்கள் முற்றுகையிடப்பட்டபோது வெளியில் சென்றுள்ளனா். 

இதனால் குறித்த பகுதியில் இன்று மாலை பதற்றமான சூழல் நிலவியது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு