கொரோனா அச்சம் காரணமாக யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையம் ஊடாக சேவைகள் மட்டுப்படுத்தப்படுகிறது..!
யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையம் ஊடான இந்தியாவுக்கான விமானசேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அலைன்ஸ் எயா் நிறுவனம் கூறியிருக்கின்றது.
கடந்த மாதம் 27 ஆம் திகதிமுதல் சென்னைக்கும்-யாழ்ப்பாணத்திற்குமிடையிலான விமான சேவையை தினசரி நடைபெற்றுவருகிறது.
எனினும் கொரோனா வைரஸ் காரணமாக இந்திய மத்திய அரசு இந்தியாவுக்கான சுற்றுலா விசாவை ஏப்ரல் 15 வரை நிறுத்தியுள்ளது.
இதனால் இந்திய பிரஜைகளை மட்டுமே தமது நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் இந்திய பயணிகள் மட்டும் பயணிப்பதால்
பயணிகள் எண்ணிக்கை குறைவடைய வாய்ப்புள்ளது. இதன்காரணமாக வெகுவிரைவில் அலையன்ஸ் எயார் நிறுவனம் தமது சேவையை மட்டுபடுத்த திட்டமிடுவதாக
அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.