கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம்..! இராணுவ சிப்பாய் உள்ளிட்ட இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம்..! இராணுவ சிப்பாய் உள்ளிட்ட இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்க லாம் என சந்தேகிக்கப்படும் இராணுவ சிப்பாய் ஒருவர் உள்ளிட்ட இருவர் யாழ்.போதனா வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் இராணுவ முகாமில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் கோரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

மற்றொருவர் வவுனியாவிலிருந்து அழைத்துவரப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இருவருக்கும் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப மருத்துவ சோதனைகளில் கோரானா வைரஸ் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனினும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு