அறிவுறுத்தல்களை உதாசீனம் செய்து இயங்கிக் கொண்டிருந்த யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் சீல் வைத்து பூட்டப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
அறிவுறுத்தல்களை உதாசீனம் செய்து இயங்கிக் கொண்டிருந்த யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் சீல் வைத்து பூட்டப்பட்டது..!

தோ்தல் அறிவிக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினா் பதவியை இழந்த பின்னரும் முன்னாள் நா டாளுமன்ற உறுப்பினரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அங்கஜன் இரா மநாதனின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடயம் தொடா்பாக மாவட்ட செயலாின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்ற து. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த அலுவலகத்தின் பணிகளை நிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு பணிப்புரை விடுத்தது.

இருந்தபோதும் தேற்றைய தினமும் மாவட்டச் செயலகத்திலுள்ள அலுவலகம் இயங்குவதனை அவதானித்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலா் கணபதிப்பிள்ளை மகேசனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இது தொடர்பில் மாவட்டச் செயலாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த அலுவல கத்தை தேர்தல் முடியும் வரையில் இயக்க வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்க ப்பட்ட நிலையிலும் இயங்குவதனால் இன்றுடன் மூடி சீல் வைக்கப்படும் என கூறினாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு