யாழ்.மாவட்டத்தில் எந்தவொரு பொருட்களுக்கும் தட்டுப்பாடில்லை..! பொருட்களை பதுக்கினால் கடும் சட்ட நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் எந்தவொரு பொருட்களுக்கும் தட்டுப்பாடில்லை..! பொருட்களை பதுக்கினால் கடும் சட்ட நடவடிக்கை..

அத்தியாவசிய பொருட்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என யாழ்.மாவட்ட செயலா் க.மகேஷன் கூறியுள் ளதுடன், மாவட்டத்தில் எந்த பொருளுக்கும் தட்டுப்பாடு இல்லை. எனவும் கூறியுள்ளாா். 

இன்று காலை ஊடகவியலாளா்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவா று கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், பதுக்கலில் ஈடுபடும் மொத்த வியாபாரிகளுக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரால் 

உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நேற்றைய தினம் கல்வி அமைச்சினால் பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட பின்னர் வடக்கில் மக்கள் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் அதிகளவானபொருட்களைகொள்வனவு செய்வதில் 

ஈடுபட்டு வருவதோடு மொத்த வியாபாரிகள் பொருட்களை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் இது தேவையில்லாத ஒரு விடயம் கொழும்பிலிருந்து பொருட்கள் வழமைபோன்று யாழிற்கு எடுத்துவரப்பட்டு கொண்டிருக்கின்றன 

அதைவிட நான் தற்பொழுது கூட்டுறவு திணைக்களத்துக்கு அறிவித்துள்ளேன் மக்களுக்கு வழங்கப்படவேண்டிய பொருட்களை தாராளமாக வழங்குமாறு எந்தவித பிரச்சனையும் இல்லாது மக்களுக்கு விநியோகிக்கு மாறும். அத்தோடு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 

கட்டளை விடுத்துள்ளேன் யாழ்ப்பாண மாவட்டத்தில் பொருட்களை பதுக்கி வைத்து வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளை உடனடியாக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளேன் எனவே பொதுமக்கள் பொருட்களுக்கு தட்டுப்பாடு 

எரிபொருள் தட்டுப்பாடு என்று அச்சமடையத் தேவையில்லை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான சகல பொருட்களும் கொழும்பிலிருந்து வழமைபோல் கொண்டுவரப்படும் எனினும் அவ்வாறு ஒரு பிரச்சனை ஏற்படுமிடத்து அதிகாரிகளினால் 

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு