யாழ்.மாவட்டத்தில் போட்டியிட ஜனசத பெரமுன கட்சி 1வது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது..!
நாடாளுமன்ற தோ்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஜனசத பெரமுன கட்சியினா் இன்று காலை யாழ்.தோ்தல் தொிவத்தாட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்கான முதலாவது வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு முதலாவது வேட்பு மனுவினை ஜனசெத பெரமுன சார்பில் பத்ர முல்லை சில ரத்தின தேரர் தனது வேட்பு மனுவினை
தாக்கல் செய்தார்.இன்று முதல் 19ஆம் தேதி வரை வேட்புமனுத்தாக்கல் ஏற்றுக்கொள்ளப்பட உள்ள நிலையில் யாழ் மாவட்ட செயலகத்தில் பொலிஸார் பாதுகாப்புக்
கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் மேலதிக பாதுகாப்பு கருதி பொலிஸாரின் மோப்ப நாய்களும் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.