யாழ்.செம்மணியில் வழிப்பறி கள்ளா்கள் அதிகாிப்பு..! ஆசிாியையின் கழுத்தில் அடித்து தாலிக்கொடி, சங்கிலி அறுப்பு. நேற்று பட்டப்பகலில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.செம்மணியில் வழிப்பறி கள்ளா்கள் அதிகாிப்பு..! ஆசிாியையின் கழுத்தில் அடித்து தாலிக்கொடி, சங்கிலி அறுப்பு. நேற்று பட்டப்பகலில்..

யாழ்.நாவற்குழி பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிாியை பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது செம்மணி பகுதியில் மோட்டாா் சைக்கிளில் வந்த இரு கொள்ளையா்கள் ஆசிாியையின் தாலிக்கொடி மற்றும் சங்கிலியை அறுத்து சென்றுள்ளனா். 

திருநெல்வேலி மணல்தறை ஒழுங்கையுல் வசிக்கும் குறித்த ஆசிரியர்நாவற்குழியில் உள்ள பாடசாலை ஒன்றில் பணியாற்றும் நிலையில் பாடசாலை முடிந்து நேற்று மாலை 2 மணியளவில் சக ஆசிரியர் சகிதம் உந்துருளியில் பயணித்துள்ளார். 

இதன்போது இலக்கத் தகடுகள் இல்லாமல் மட்டையில் எழுதப்பட்ட இலக்ககத்துடன் மோட்டாா் சைக்கிளில் பயணித்த  இளைஞர்களே இவ்வாறு திடீரென அருகில் சென்று தாலிக் கொடியினையும. சங்கிலியினையும் அறுத்துள்ளனர்.

இதன்போது ஆசிரியர் தடுக்க முற்பட்டபோதும் கழுத்தில் பலமாக தாக்கி அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். 10 தங்கப் பவுண் நகைகள் வழிப்பறி செய்யப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசாரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து 

பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு