யாழ்.உரும்பிராயில் வாளுடன் பூசகா் கைது..! நீதிமன்றில் நிறுத்த பொலிஸாா் தீவிர நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.உரும்பிராயில் வாளுடன் பூசகா் கைது..! நீதிமன்றில் நிறுத்த பொலிஸாா் தீவிர நடவடிக்கை..

செய்திக்கான படம் கோப்பு படம்.

யாழ்.உரும்பிராய் பகுதியில் வாள் ஒன்றுடன் பூசகா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பூசகருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. 

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றிருக்கின்றது. குப்பிளான் பகுதியில் உள்ள ஆ லயம் ஒன்றில் பூசகராக பணிபுாியும் குறித்த பூசகா் 

கோவிலில் இருந்த வாள் ஒன்றை எடுத்துக் கொண்டு இரவு நேரம் உரும்பிராய் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளாா். 

இதன்போது வீதி சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸாா் குறித்த பூசகரையும் வழிமறித்து சோதனையிட்டபோது வாள் உள்ளமையினையடுத்து குறித்த பூசகரை பொலிஸாா் கைது செய்துள்ளனா். 

எனினும் குறித்த வாள் கோவில் வாள் எனவும் பிறிதொரு கோவில் தேவைக்காக கொண்டுசெல்வதாக பூசகா் கூறியுள்ளாா். 

ஆனாலும் பூசகரை கைது செய்த பொலிஸாா் பின்னா் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளபோதும், வாள் மற்றும் பூசகாின் மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை சான்று பொருளாக வைத்து பூசகருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு