மாணவிகளுடன் தகாதமுறையில் நடக்க முயன்றால் சம்பவம் நடக்கும்..! யாழ்.பல்கலைகழகத்திற்குள் எச்சாிக்கை துண்டு பிரசுரத்தால் பரபரப்பு..

ஆசிரியர் - Editor I
மாணவிகளுடன் தகாதமுறையில் நடக்க முயன்றால் சம்பவம் நடக்கும்..! யாழ்.பல்கலைகழகத்திற்குள் எச்சாிக்கை துண்டு பிரசுரத்தால் பரபரப்பு..

மாணவிகளுடன் சேஷ்டை விடுவதும், சமுக பிறழ்வான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் கடு மையான நடவடிக்கை எடுக்கப்படும். என யாழ்.பல்கலைகழகத்திற்குள் இன்று ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளினால் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது. 

வடகிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் உடனடியாக சகல விதமான சமுதாய சீர்கேடுகளும் நிறுத்தப்பட வேண்டும். இளைஞனார்கள் மீது பெற்றோர் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் எவராலும் காப்பாற்ற முடியாமல் போகும்.

இங்கு இனி வாய்ப்பேச்சுக்கு இனி எதுவும் இல்லை. ஆனால் செயலில் செய்வதற்கு நிறைய உண்டு. மக்கள் அனைவரும் நாம் யார்? எமது பண்பாடு கலாசாரம் எது என்று உணர்ந்து எம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்க முன்வரவேண்டும்.

தமிழர் தேசத்தின் கலை,பண்பாடு கலாசாரம் இவற்றை கருத்தில் கொள்ளும் அரசாங்கம் மட்டுமே எமக்கு வேண்டும். அத்தோடு எமது கலை கலாசாரத்தை பேணிப் பாதுகாப்பது எமது கடமை இனிவரும் காலங்களில் சமூக விரோத குற்றங்களுக்கு 

தகுந்த தண்டனை வழங்கப்படும்.பெண்கள் மீது கைவைத்தாலோ அல்லது மாணவர்கள் உடன் சேட்டை விடுத்தாலோ அதற்கு தண்டனை வழங்கப்படும். தடை கற்கள் உண்டு என்றால் தடை தாண்டும் கால்களும் உண்டு என தெரிவித்து குறித்த துண்டு பிரசுரத்தில் 

தமிழ் இளைஞர் படையணி மண்ணின் மைந்தர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு