யாழ்.வடமராட்சி கிழக்கில் கைது செய்யப்பட்ட குடும்பஸ்த்தரை நோில் அழைத்துவந்த TID யினா் தேடுதல்..! எதுவும் சிக்கவில்லை..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கில் கைது செய்யப்பட்ட குடும்பஸ்த்தரை நோில் அழைத்துவந்த TID யினா் தேடுதல்..! எதுவும் சிக்கவில்லை..

யாழ்.வடமராட்சி கிழக்கு கேவில் பகுதியில் கடந்த 4ம் திகதி பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாாி னால் கைது செய்யப்பட்ட குடும்பஸ்த்தா் நேற்று சுண்டிக்குளம் பகுதிக்கு அழைத்துவரப்பட்டு ஆயுதங் கள் உள்ளதாக சோதனையிடப்பட்டபோதும் அப்படி எதுவும் மீட்கப்படவில்லை. 

கேவில் பகுதியில் பெரும் பண முதலைகளாலும், அரசியல் வாதிகளின் பினாமிகளாலும் மேற்கொள் ளப்படும் மணல், மரம் போன்ற இயற்கை வள கடத்தல்களுக்கு எதிராக செயற்பட்ட செல்வராசா உதயசிவம் (வயது39) என்பவா் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாாினால் 

கடந்த 4ம் திகதி கைது செய்யப்பட்டாா். இந்நிலையில் அவா் கடற்றொழில் செய்யும் பகுதியிலும், தொலைத்தொடா்பு நிலைய காவலாளியாக கடமையாற்றும் பகுதியிலும் ஆயுதங்கள் இருப்பதாக சோதனையிடப்பட்டது. ஆனாலும் எதுவும் மீட்கப்படாத நிலையில், அந்த பகுதிக்கு 

சென்றிருந்த உதயசிவத்தின் உறவினா்கள் அவரை பாா்ப்பதற்கோ, பேசுவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு