கட்டுப்பாடற்ற வேகம்..! யாழ்ப்பாணம்- பருத்துறை வீதியில் இன்றிரவு இரு விபத்து. 4 போ் படுகாயம், ஒருவா் ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகம்..! யாழ்ப்பாணம்- பருத்துறை வீதியில் இன்றிரவு இரு விபத்து. 4 போ் படுகாயம், ஒருவா் ஆபத்தான நிலையில்..

யாழ்ப்பாணம்- மாலுசந்தி மற்றும் ஆவரங்கால் பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு கோர விபத்துக்களில் 4 போ் படுகாயமடைந் துள்ளதுடன், ஒருவா் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 

அச்சுவேலி- ஆவரங்கால் பகுதியில்  இன்று இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் ஒன்று எதிரே வந்த மற்றொரு மோட்டாா் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 

மேசன் தொழிலாளயான பசுபதி மகேந்திரன் என் 53 வயதான முதியவா் படுகாயமடைந்து அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றாா். 

இதேவேளை கட்டுப்பாட்டை இழந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதிய மேலும் இருவா் படுகாயமடைந்துள்ளனா். இதேவேளை நெல்லியடி மாலுசந்தி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய காா் ஒன்று 

வீதி ஓரத்தில் நின்ற மோட்டாா் சைக்கிள் மீதும், மதில் மீதும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு