கச்சதீவில் காணாமல்போன 7 படகுகள் மீட்பு..! 3 படகுகளை தேடும் கடற்படை. 30ற்கும் மேற்பட்ட பக்தர்கள் கச்சதீவில் அந்தரிப்பு..

ஆசிரியர் - Editor I
கச்சதீவில் காணாமல்போன 7 படகுகள் மீட்பு..! 3 படகுகளை தேடும் கடற்படை. 30ற்கும் மேற்பட்ட பக்தர்கள் கச்சதீவில் அந்தரிப்பு..

கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு பக்த ர்களை ஏற்றி சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்த 10 படகுகளில் 7 படகுகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்றய தினம் கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நடைபெற்றிருந்தது. திருவிழாவுக்கு யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் இருந்து சென்ற பக்தர்களின் 

10 படகுகள் கட்டப்பட்டிருந்த நிலையில் காணாமல்போயிருந்தது. இதனால் சுமார் 100ற்கு மேற்பட்ட பக்கதர்கள் தமது இருப்பிடங்களுக்கு திரும்ப முடியாத நிலையில் கச்சதீவில் தங்கினர்.

இதனையடுத்து கடற்படையினர் நடத்திய தேடுதலில் 7 படகுகள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சுமார் 70 வரையான பக்தர்கள் இருப்பிடங்களுக்கு

திரும்பியிருக்கின்றனர். இந்நிலையில் காணாமல்போன 3 படகுகளை தேடும் பணியில் கடற்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு