கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு சென்ற 10 படகுகளை காணவில்லை..!

ஆசிரியர் - Editor I
கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு சென்ற 10 படகுகளை காணவில்லை..!

கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவுக்காக சென்றிருந்த பக்தர்களின் 10 படகுகள் காணாமல் போயிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கச்சதீவு, அந்தோனியார் திருவிழாவிற்கு வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சென்ற படகுகள் அடங்கலாக 10 படகுகள் காணாமல் போயுள்ளன.

கடற்கரையில் கட்டிவிடப்பட்ட நிலையில் அவை காணாமல் போயுள்ளமையால் அங்குள்ளவர்கள் வீடு திரும்ப முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் படகுகளைத் தேடும் பணியை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, 7 வரையான படகுகள் இந்தியாவில் கரை ஒதுங்கியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு