யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரு பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரு பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவா் ஒரு பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற் றெடுத்திருக்கின்றாா். 

தலைப் பிரசவத்துக்காக கடந்த-03 ஆம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இவர் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 

மாற்றப்பட்ட நிலையில் கடந்த-03 ஆம் திகதி ஒரே சூலில் மூன்று ஆண் குழந்தைகளையும், ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.

தற்போது குறித்த நான்கு குழந்தைகளும் , இளம் தாயும் சுகதேகியாக காணப்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்.கட்டுவன் மேற்கைச் சேர்ந்த கிருஷ்ணபவன் கீர்த்திகா (வயது-30) என்ற இளம் பெண்ணே இவ்வாறு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளையும் பெற்றெடுத்தவராவார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு