ஒரு சதம் நிதி கூட மத்திக்கு திரும்பவில்லை..! நிரூபித்துக் காட்டுங்கள் இந்த நிமிடமே அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன். சீ.வி சவால்..

ஆசிரியர் - Editor I
ஒரு சதம் நிதி கூட மத்திக்கு திரும்பவில்லை..! நிரூபித்துக் காட்டுங்கள் இந்த நிமிடமே அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன். சீ.வி சவால்..

என்னுடைய ஆட்சிக்காலத்தில் வடமாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட ஒரு சதம் கூட மத்திக்கு திரும் பவில்லை. திரும்பியதாக நிரூபித்துக் காட்டுங்கள் இந்த நிமிடமே அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன். 

மேற்கண்டவாறு வடமாகாணசபை முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளாா். வடமாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பியதாக எழுந்தள்ள குற்றச்சாட்டு தொடா்பாக இன்று பருத்துறையில் இடம்பெற்ற

பல்கலைகழக மாணவா்கள் மற்றும் இளைஞா்களுடனான சந்திப்பில் அவா் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றாா். இது தொடா்பாக மேலும் அவா் கூறுகையில், என்னுடைய ஆட்சிக்காலத்தில் வடமாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் 

ஒரு சதம் கூட திருப்பி மத்திக்கு செல்லவில்லை. அவ்வாறு திரும்பி சென்றால் எவரேனும் நிரூபித்தால் இந்த நிமிடமே அரசியலில் இருந்து ஒதுங்குவேன் எனவும் கூறியுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு