மீண்டும் ஆவா குழு அடாவடி..! கோண்டாவிலில் நேற்றிரவு தாக்குதல்..

ஆசிரியர் - Editor I
மீண்டும் ஆவா குழு அடாவடி..! கோண்டாவிலில் நேற்றிரவு தாக்குதல்..

யாழ்.கோண்டாவில் பகுதியில் ஆவா குழு ரவுடிகள் வாகனம் ஒன்றை அடித்து நொருக்கிவிட்டு தப்பி சென்றிருக்கின்றனா். 

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது, கோண்டாவில் சந்தியிலுள்ள பூட் சிற்றி ஒன்றிலேயே நேற்று இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் பூட் சிற்றியில் வேலை பார்க்கும் மனோஜர் என்பவருடைய வாகனமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன் இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென வாகன உரிமையாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு