போா் குற்றங்களை செய்யவில்லை என வீராப்பு பேசுகிறவா்கள் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை கண்டு நடுங்குவது ஏன்..?

ஆசிரியர் - Editor I

போா் குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களை செய்யவில்லை என்றால், சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் தோன்றுவதற்கு எதற்காக பயப்படுகின்றீா்கள்? என தமிழ் தேசிய மக்கள் மன்னணியின் ஊடக பேச்சாளா் வி.மணிவண்ணன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வி.மணிவண்ணன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.அத்தோடு, இலங்கை அரசாங்கம் மற்றும் படையினரை சர்வேதேச நீதிமன்றத்தின் 

முன் நிறுத்துங்கள் எனவும் அதன் பின்னர்தான் யார் கடத்தலில் ஈடுபட்டார்கள், யார் காணாமல் செய்யப்பட்டார்கள், எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டார்கள் மற்றும் இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன எனும் அனைத்து மர்மங்களும் வெளியில்வரும் என 

வி.மணிவண்ணன் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் , நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு மாகாணத்தில் மாத்திரமின்றி கிழக்கு மாகாணத்திலும் பாரிய மாற்ற மொன்றை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்படுத்தும் என 

வி.மணிவண்ணன் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு