மிருசுவில் படுகொலையாளிக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி கோட்டா தீா்மானம்..!

ஆசிரியர் - Editor I
மிருசுவில் படுகொலையாளிக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி கோட்டா தீா்மானம்..!

யாழ்.மிருசுவில் படுகொலையில் மரண தண்டணை விதிக்கப்பட்ட இராணுவ சாா்ஜன்டை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய ஜனாதிபதி தீா்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியி ருக்கின்றது. கடந்த 2000ஆம் ஆண்டு 8 தமிழா்கள் படுகொலை செய்யப்பட்டனா், 

குறித்த சம்பவத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் 14 இராணுவச் சிப்பாய்கள் கைது செய்யப்பட்டனர். சாவகச்சேரி நீதிமன்றதால் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வந்தது.

அதன்பின்னர் குறித்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, பின்னர் கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் விசாரிக்கப்பட்டது.இதன்போது வழக்கில் 5 இராணுவச்சிப்பாய்கள் மீது குற்றப்பத்திரம் 

தாக்கல் செய்யப்பட்டிருந்தது.கடந்த 2015 யூன் 25 அன்று நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், சார்ஜண்ட் சுனில் ரத்னாயக்கவிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு ஏனைய நான்கு சிப்பாய்களையும் போதிய ஆதாரமில்லையென்பதால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். 

இந்த நிலையில் மிருசுவில் படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்னாயக்கவிற்கு, எதிர்வரும் பொதுத்தேர்தலின் முன்னர் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல்கள்

 வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு