கச்சதீவு அந்தோனியாா் ஆலய திருவிழாவுக்கு சென்றவா்களிடம் சோதனை..! 18 மதுபான போத்தல்கள் பறிமுதல்..
கச்சதீவு அந்தோனியாா் ஆலய வருடாந்த மஹோட்சபத்திற்கு மதுபான போத்தல்களை கொண்டு சென்றவா்கள் கடற்படையினால் கண்டிக்கப்பட்டதுடன், மதுபான போத்தல்கள் பறிக்கப்பட்டது.
அந்தோனியாா் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நாளை இடம்பெறவுள்ள நிலையில் யாழ்.மாவட் டத்திலிருந்து 2500 பக்தா்கள் இதுவரை கச்சதீவுக்கு பயணமாகியிருக்கின்றனா்.
இந்நிலையில் குறிகட்டுவான் பகுதியில் இன்று கடற்படையினா் நடத்திய சோதனை நடவடிக்கை யின்போது 18 மதுபானபோத்தல்கள் மீட்கப்பட்டிருக்கின்றது. மேலும் மதுபானபோத்தல்களை
கொண்டு சென்றவா்களை கடற்படையினா் கண்டித்திருக்கின்றனா்.